மதுபாட்டிலை திறந்தவுடன் மதுப்பிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தீயாய் பரவும் காட்சிகள்

x

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுபாட்டில் உள்ளே முழு தீக்குச்சி கிடந்ததால் மதுப்பிரியர்கள் வேதனை அடைந்தனர். ஏலூர்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர் வாங்கிய மதுபாட்டிலில் பார்த்தபோது, ஒரு முழு தீக்குச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அந்த தீக்குச்சியில் உள்ள கந்தக மருந்து முழுவதும் மதுவில் கலந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூலித்தொழிலாளி டாஸ்மாக் கடைக்கு நேரில் சென்று விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த வீடியோ வாட்ஸப்பில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்