மோட்டார் அறையில் பிறந்த குழந்தையை விட்டு சென்ற தாய் -விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

ஈரோட்டில் பிறந்த சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று விவசாய நிலத்தின் மோட்டார் அறையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூரில் மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.

இந்த தோட்டத்திற்கு காலையில் விவசாய வேலைக்கு சென்ற ரஞ்சித் என்பவர் மோட்டார் அறையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையின் அழுகரலை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

பின் அருகில் உள்ள ராசாம்மாள் என்ற மூதாட்டியை அழைத்து சென்று குழந்தையை எடுத்து வந்து பராமரித்து, போலீசில் புகாரளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஈரோடு அரசி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து குழந்தையை மீட்டு அனுப்பி வைத்தனர்.

பின் குழந்தை கிடைத்த தோட்டத்திற்கும், மோட்டர் அறைக்கும் சென்று போலீசார் சோதனை செய்துள்ளானர்.

அப்போது, மோட்டர் அறையில் பெண்ணிற்கு பிரசவம் பார்த்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளன.

மேலும், குழந்தையின் பெற்றோர் யார், குழந்தையை ஏன் விட்டு சென்றனர், இதன் பிண்ணனியில் யார் யார் உள்ளார்கள் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்