இரண்டாக உடைந்த கப்பல்.. கடலில் மூழ்கிய பரபரப்பு காட்சி..நினைவில் கொண்டு வந்த டைட்டானிக் படம் | china

சீனாவின் ஹாங்காங் அருகே 'சாபா' புயலில் சிக்கிய கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.
x

சீனாவின் ஹாங்காங் அருகே 'சாபா' புயலில் சிக்கிய கப்பல் ஒன்று இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.கடற்பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த கப்பல் ஒன்று, 'சாபா' புயலில் சிக்கியது. இதனால், கொந்தளிப்பான கடலில் அலைமோதிய கப்பல், இரண்டாக உடைந்து மூழ்கத் தொடங்கியது. உடனடியாக ஹாங்காங்கில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விரைந்த மீட்புப் படையினர், கப்பலில் இருந்தவர்களை கயிறு கட்டி மீட்க முயன்றனர். 3 பேரை மீட்ட நிலையில், கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த மேலும் 27 பேரின் நிலை தெரியாத‌தால், மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்