’லிப்ட்டை தொட்ட அடுத்த நொடி.. 2 துண்டான இளைஞர் உடல் - சென்னையை உலுக்கிய கோரம்...

x

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில், லிப்டில் சிக்கிக்கொண்ட தூய்மை பணியாளர் ஒருவர் உடல் துண்டாகி உயிரிழந்திருக்கிறார்... இந்த கோர சம்பவம் குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்...


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதி, 11 அடுக்குமாடி கட்டிடம் கொண்ட ஹோட்டலாக செயல்பட்டு வருகிறது...

அங்கு சென்னை பெரம்பூரை சேர்ந்த 27 வயதான அபிஷேக் என்பவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார்...

விடுதியின் தூய்மை பணியாளராகவும், சர்வீஸ் பாயாகவும் வலம் வந்த அபிஷேக், சம்பவத்தன்று 9 ஆவது மாடியில் சுத்தம் செய்து விட்டு, தரைத்தளத்திற்கு செல்ல வந்துள்ளார்...

இதற்காக, லிப்டை பயன்படுத்த எண்ணி அதில் ஏற முயன்றபோது, லிப்டில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது... லிப்டின் கதவு முழுவதும் மூடாமல் சட்டென கீழே செல்ல, நடப்பது என்னவென்று சிந்திப்பதற்குள் நொடிபொழுதில் கதவுகளுக்கிடையில் சிக்கிய அபிஷேக், உடல் துண்டாகி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

சம்பவத்தன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஹோட்டலில் ஆட்கள் நடமாட்டம் அதிகமில்லாத நிலையில், சிறுது நேரத்திற்கு பிறகே ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்...

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு துண்டாக அபிஷேக்கின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்...

மேலும் தொழில்நுட்ப கோளாறினால் தான் இந்த அசம்பாவிதம் நடந்ததா ?..அல்லது ஹோட்டல் நிர்வாகத்தின் தொழில்நுட்ப சாதனங்கள் மீதான கவனக்குறைவா? அலட்சியமா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள பாத்திரக்கடை ஒன்றில், மேல்தளத்தில் உள்ள குடோனில்... பொருள்களை எடுத்து வருவதற்காக திறந்த வெளி லிப்டில் சென்ற வடமாநில தொழிலாளி ஒருவர், லிப்டின் பக்கவாட்டில் சிக்கி உயிரிழந்த நிலையில், மற்றுமொரு லிப்ட் விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்