ஆத்தாடி மறுபடியுமா..? - அடி பம்புடன் சேர்ந்து ரோடு போட்ட விஞ்ஞானி

x

புதுக்கோட்டையில், அடி பம்புடன் சேர்த்து ஹாலோ ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. புதுக்கோட்டை, மியூசியம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியின் போது, அடி பம்புடன் சேர்த்து ஹாலோ ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்டதால், பொதுமக்கள் தண்ணீர் எடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்