கேரளாவை பரபரப்பாக்கிய தன்பாலின ஜோடி.. இறுதியில் நடந்த சோகம்
கேரளாவில் குடும்பத்தினரால் கடத்தப்பட்ட தன்பாலின ஜோடி பெற்றோருடன் செல்ல சம்மத்தித்ததை அடுத்து ஆட்கொணர்வு மனுவை கேரள உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. மலப்புரத்தை சேர்ந்த தன்பாலின ஜோடியான சுமையா செரின், அபீபா ஆகியோர் பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறி கொளஞ்சேரியில் வசித்து வந்தனர். அங்கு வந்த அபீபாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றதாக சுமையா செரின் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு அபீபா ஆஜராகி, பெற்றோருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சுமையா செரின் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை கேரள உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
Next Story