மாமூல் கேட்டு மிரட்டி கடை ஊழியரை சப்புன்னு கன்னத்தில் அறைந்த ரவுடி..! சிசிடிவி காட்சிகள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், அருண் என்ற பிரபல ரவுடி, கடைகள் மற்றும் உணவகங்களில் மாமூல் கேட்டு மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புகார் அளித்தால் காவல்நிலையத்தில் வாங்க மறுப்பதாக வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் தனியார் உணவகத்திற்கு ரவுடி அருண் மாமூல் கேட்டு வருவதும், கடை ஊழியரை தாக்குவதும் போன்ற சிசிடிவி காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் ரவுடி அருண் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்