சென்னையில் அட்டூழியம் செய்த ரவுடிகள்.. கையில் கட்டுப்போட்டு குழந்தை போல தூக்கி சென்ற போலீசார்

x

சென்னையில் அட்டூழியம் செய்த ரவுடிகள்.. கையில் கட்டுப்போட்டு குழந்தை போல தூக்கி சென்ற போலீசார்

சென்னையை அடுத்த ஆலந்தூர் ஆபிரகாம் தெருவில் கடந்த 10ந் தேதி பெட்ரோல் குண்டுகளை வீசியதோடு அரிவாளால் தாக்குதல் நடத்திய 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

ரவுடிகள் நடத்திய தாக்குதலில் கூரியர் நிறுவன ஊழியர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சூழலில் கைது செய்யப்பட்ட 19 ரவுடிகளில் சஞ்சய், கவுதம் ஆகிய 2 பேர் இந்த கூட்டத்தை வழிநடத்தி சென்றவர்கள் என கூறப்படுகிறது.

இதில் அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிய போது வழுக்கி விழுந்ததில் அவர்களின் கை, கால்கள் உடைந்தது.

அவர்களை போலீசார் குழந்தை போல அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்