போகும் இடமெல்லாம் ஒவ்வொன்றாய் அள்ளி போட்ட கொள்ளையர்கள் - இறுதியில் போலீஸ் வைத்த ட்விஸ்ட்

x

திருத்துறைப்பூண்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், கட்டிமேடு கிராமத்தில் காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் சிலையில் இருந்த தங்க நகைகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். அதே பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றனர். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக திருடர்களை திருத்துறைப்பூண்டி போலீசார் தேடி வந்தனர். இந்த திருட்டு தொடர்பாக, தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த பாலசிங்கம் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 சவரன் தங்க தாலி செயின்,11 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்