"அவர் உடலை பாக்கணும் முதல்வர் ஐயா.." துபாயில் இறந்த நபரின் மனைவி கண்ணீர்...

x

துபாயின் அல்டராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். அந்த 4 பேரில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த இமாம் காசிம் மற்றும் ரஃபிக் ஆகிய இருவர் அடங்குவர். இந்த இருவரும் துபாயில் பெயிண்டர் மற்றும் கார்பெண்டர் பணிகளை செய்து வந்தனர். இதுகுறித்து உயிரிழந்த ரஃபிக்கின் உறவினர் கூறுகையில், தீயில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றச் சென்றபோது, ரஃபிக்கும், இமாம் காசிமும் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், உயிரிழந்த இமாமுக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்த நிலையில், ரம்ஜான் முடிந்து வீடு அவர் திரும்புவதாக இருந்ததாக உறவினர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நிதியுதவி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த அவர்கள், உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்