"இந்தியாவின் யதார்த்தம் ஊழல்,அசுத்தமான சாலை,மாசு" - இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

x

இந்தியாவின் யதார்த்தம் ஊழல், அசுத்தமான சாலைகள், மற்றும் மாசு என்றும், அதே சமயம் சிங்கப்பூரின் யதார்த்தம் தூய்மையான சாலை மற்றும் மாசற்ற தன்மை என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் உள்ள ஜி.எம்.ஆர் தொழில்நுட்ப நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசிய அவர், இருநாடுகளின் யதார்த்தங்களையும் ஒப்பிட்டதோடு, புதிய யதார்த்தத்தை உருவாக்குவது உங்கள் பொறுப்பு என்று இளைஞர்களை வலியுறுத்தினார். மேலும், இளைஞர்கள் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், தங்கள் சொந்த நலனைக் காட்டிலும் தேச நலன்களை முதன்மைப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்