கடையில் கொடுக்கப்பட்ட வினாத்தாள் பார்சல் ..வாங்க வந்த ஆசிரியருக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் பிரிக்கப்பட்டதாக வந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பள்ளிகளின் 4 மற்றும் 5-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான வினாத்தாள் பார்சலை, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ஆசிரியர் கொடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனை வாங்க, கொடைக்கானலைச் சேர்ந்த ஆசிரியர் வந்தபோது, பார்சல் பரிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனினும், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார் .


Next Story

மேலும் செய்திகள்