சட்டப்பேரவையில் ஓபிஎஸ் கேட்ட கேள்வி.. உறுதி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய ஓபிஎஸ், கொரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தங்க இடம் கொடுத்த விடுதிகள், உணவகங்களுக்கு உரிய கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நியாயமான கட்டிடத்தில், தரமான உணவு வழங்கிய அனைவருக்கும் பில் தொகை வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். அநியாயமான முறையில் உணவகமே இல்லாமல் உணவு விநியோகம் செய்ததாக வழங்கப்பட்ட பில்களுக்கான தொகை இதுவரை வழங்கவில்லை என்றும், அது குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். உண்மையில் உணவைத் தரமாக வழங்கி இருந்தால் தொகை உறுதியாக வழங்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்