இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் பிரச்சினை இருதரப்பினரிடையே மோதல் - அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு

x

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.


அம்மாபேட்டை அருகே உடையார் கோவில் பகுதியில் சீனிவாசன் என்பவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு செல்லும் போது மற்றொரு தரப்பினர் தங்கள் தெரு வழியாக செல்லக்கூடாது என கூறி சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் உண்டாகி இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்