பள்ளியில் கழிவறை கட்டுவதில் பிரச்சினை... பணிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் - தர்ணாவில் ஈடுபட்ட பி.டி.ஓ

x

ஆம்பூர் அருகே, பள்ளி கழிவறை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சி அரசு ஆரம்பப் பள்ளியில் கழிவறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் அதிகாரிகளுக்கும், ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சினை இருந்தது. இந்நிலையில் தேர்வு செய்த இடத்தில் பணிகளை தொடங்கியபோது பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து, வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் ஜே.சி.பி. முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது. இதனைத் தொடர்ந்து கட்டட பணிகள் தொடங்கின.


Next Story

மேலும் செய்திகள்