"கேட்க ஆள் இல்லைனு ஆடுறீங்களா?" - அதிவேகத்தில் பறந்த பிரைவேட் பஸ்.. பாய்ந்து பிடித்து சுளுக்கெடுத்த அதிகாரிகள்

x

தனியார் பேருந்துகளை மடக்கிப்பிடித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அதிகாரிகள், விதிமுறைகளை பின்பற்ற மாட்டீர்களா? என்று கேள்வி கேட்டனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இயங்கும் தனியார் பேருந்துகள், அதிவேகமாகவும், அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்துவதகாவும் புகார் எழுந்த‌து. இதையடுத்து, திருநள்ளார் பகுதியில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை மடக்கிக் பிடித்து, வேக கட்டுப்பாட்டுக் கருவி, அதிக சத்தம் எழுப்பும் ஹாரன் பொறுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்தனர். விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கி வந்த சில பேருந்துகளை கண்டுபிடித்த அதிகாரிகள், பேருந்தை பறிமுதல் செய்தால் தான் விதிகளை பின்பற்றுவீர்களா? என்று ஓட்டுநர் நடத்துனரிடம் கேள்வி எழுப்பினர். பின்னர், குறைகளை சரிசெய்து, போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்