திடீரென்று drum stick-யை எடுத்து கலைஞர்களுடன் வாசித்த பிரதமர் | PM Modi

x

நாக்பூரில் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

நாக்பூர் மெட்ரோ ரயிலின் முதற்கட்ட சேவையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிக்காக அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து நாக்பூரையும், ஷீரடியையும் இணைக்கும் விதமாக 520 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்ட முதல் கட்ட நெடுஞ்சாலையை தொடங்கி வைத்தார். சுமார் 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த தேசிய நெடுஞ்சாலை மகராஷ்டிராவின் 10 மாவட்டங்கள், அமராவது, அவுரங்காபாத் மற்றும் நாசிக் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பதால், இந்தியாவின் மிகவும் நீளமான விரைவு சாலையாக அமைய உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்