"மக்களின் நலனில் பிரதமருக்கு அக்கறை இல்லை.." - ராகுல்காந்தி காட்டம்...

x

தனது டீ-ஷர்ட் குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள், ஏழை குழந்தைகள், விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் கிழிந்த ஆடை குறித்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை என ராகுல்காந்தி கேட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் பாரத் ஜோடோ யாத்திரையில் உள்ள ராகுல்காந்தி, தனது டீ -ஷர்ட் குறித்து சர்ச்சைகள் பரப்புவதாக தெரிவித்தார்.

குளிர்காலத்தில் ஏழை குழந்தைகளும், விவசாயிகளும், கூலி தொழிலாளிகளும் போர்வை கூட இல்லாமல், கிழிந்த ஆடையுடன் இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் பிரதமர் மோடியின் அரசு மக்கள் குறித்து சிந்திப்பதில்லை என்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில்லை என்றும் சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்