மந்திரம் சொன்ன புரோகிதர் - Thug செய்த அமைச்சர் | Cuddalore

x

கடலூர் மாவட்டம் பச்சையாங்குப்பம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியின் தொடக்க விழாவின்போது, மந்திரம் கூறிய ஐயரை நிறுத்தச் சொல்லிவிட்டு, நிகழ்ச்சியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆரம்பித்து வைத்தார். வெகு நேரமாக ஐயர் மந்திரம் கூறிக் கொண்டிருந்ததால், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மந்திரத்தை நிறுத்தச் சொன்னார். பின்னர் ஐயர் கொடுத்த பூவை என்ன செய்ய வேண்டும் என அமைச்சர் கேள்வி எழுப்பியதற்கு, கல்லில் போடுமாறு ஐயர் கூறினார். அப்போது, ஒவ்வொரு ஐயரும் ஒவ்வொரு மாதிரி கூறுகிறீர்கள் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியது, சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்