ஆடுகளை மட்டும் ஆட்டைய போடும் கொள்கை திருடன்....

x

சேலம் மாவட்டம் ராமநாயக்கன்பாளையம் அடுத்த ஊத்துமேடு பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் ஆடுகள் திருட்டை தடுக்கக்கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். கடந்த 1 வருடமாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் ஆடுகள் திருடு போவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் தொடர்ந்து நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்ககோரி 50க்கும் மேற்பட்டோர் இணைந்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.

https://youtu.be/uIx2NNZK-HY


Next Story

மேலும் செய்திகள்