ஆசை வார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய காவலர் - பாய்ந்த அதிரடி நடவடிக்கை

x

ராமநாதபுரத்தில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணுடன் நெருக்கமாக இருந்துவிட்டு ஏமாற்றிய ஆயுதப்படை காவலர் கைது செய்யப்பட்டார்.

கமுதி அருகே உள்ள வளையபூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர், கோட்டைமேட்டில் உள்ள தனி ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இளையராஜாவுக்கும், இதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தன்னுடன் நெருக்கமாக இருந்துவிட்டு ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்ட பெண் கமுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்த நிலையில், இளையராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஆயுதப் படையில் காவலர் இளையராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்