ரோந்து பணியில் இருந்த போலீஸ்..பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய கும்பல்..விசாரணையில் வெளியான அதிர்ச்சி

x

திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் சுற்றித் திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த 5 பேர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது, அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்