பைக்கை நிறுத்திய போலீசுக்கு அடி - 3 இளைஞர்களால் அதிர்ந்த சென்னை .. விசாரணையில் வெளியான திக் தகவல்

x

சென்னை, பல்லாவரத்தில் கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் வீரசெல்வம். இவர், பல்லாவரம் அருகே இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், காவலருடன் தகராறு செய்து அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பம்மல் பகுதியை சேர்ந்த ரோகித், விக்னேஷ் மற்றும் முகமது ஆசிப் ஆகிய மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்