துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரை சுட்டுப் பொசுக்கிய போலீஸ் - அதிர்ச்சி சம்பவம்

x

மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2 அதிகாரிகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தாக்குதல் நடத்திய 18 வயதுடைய நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் உடலை மீட்ட போலீசார், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் இந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்