அனுமதி மறுக்கப்பட்ட சாலையில் சென்ற போலீஸ் ரோந்து வாகனம்... ரூ.500 அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை

x

சென்னையில் அனுமதி மறுக்கப்பட்ட சாலையில் ரோந்து வாகனத்தை ஓட்டிய காவலருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நுங்கம்பாக்கம் அருகே வலது புறம் திரும்ப அனுமதி மறுக்கப்பட்ட சாலையில், காவல் ரோந்து வாகனம் ஒன்று சென்றது.

இதை ஒருவர் புகைப்படம் எடுத்து சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து, அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற காவலருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் துறை, அதற்கான ரசீதை புகார் அளித்தவரின் ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்