வெடுக்கு.. வெடுக்கென சீறிய பைக் - "வா இங்க.." வசமாக கவனித்த போலீஸ்

x

மதுரையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் செய்த இளைஞருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்தனர்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் ராஜபிரபு என்ற இளைஞர் தனது நண்பர்கள் இருவருடன், ஒரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்றதோடு, தலைக்கவசம் அணியாமலும், சாலையில் சாகசம் செய்யும் வகையிலும் வாகனத்தை இயக்கியுள்ளார். இதனை மற்றொரு வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட, வைரலாக பரவியது. விசாரணை மேற்கொண்ட போலீசார், ராஜபிரபுவுக்கு 4ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்