சடலத்தை கார் பின்புறத்தில் ஏற்றி சென்ற போலீஸ் - கடலூரில் பரபரப்பு

x

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு பகுதியில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தை, காரின் பின்புறத்தில் ஏற்றி அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புவனகிரி - விருத்தாசலம் சாலயோரம் உள்ள கால்வாயில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். வழக்கமாக மீட்கப்படும் சடலம் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மீட்கப்பட்ட சடலத்தை போலீசார், காரின் பின்புறத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்