தாசில்தாரை அதிரடியாக கைது செய்த போலீசார்

x

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலங்கள் தனியாருக்கு மாற்றி கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு, கடந்த ஆண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், துணை வட்டாட்சியர்கள், நில சர்வேயர்கள், உதவியாளர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

சுமார் 6 மணி நேர விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்