வீட்டில் இருந்த ரகசிய அறை..மாமியார்,மருமகள் நடத்திய பிசினஸ்.. ஒற்றுமைக்கு வேட்டு வைத்த போலீஸ்

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், சினிமா பட பாணியில், வீட்டிற்குள் மறைவிடத்தை உருவாக்கி, மதுபாட்டில் தயாரித்து விற்பனை செய்து வந்த மாமியார் மற்றும் மருமகளை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகப்படியான சந்துக் கடைகளில், 24 மணி நேரமும் மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரிந்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, சந்தேகத்திற்குரிய அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, ரகசிய அறை மூலம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். டாஸ்மாக் கடைகளில் வாங்கப்பட்ட மதுபாட்டில்களை வாங்கி, அதில் சில ரசாயனங்களையும், ஊமத்தை காய் என்ற விஷ காயையும் சேர்த்தும், போதை வஸ்துவாக மாற்றி, விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில் என விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டிலிருந்து 621 விலை உயர்ந்த மதுபாட்டில்களைக் கைப்பற்றிய போலீசார், இதுதொடர்பாக மாமியார் லட்சுமி, மருமகள் மகேஸ்வரி ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்