கத்தியைக் காட்டி மிரட்டி இருசக்கர வாகனம் திருட்டு- 3 பேரை கைது செய்தது காவல்துறை

x

புழல் அருகே கத்தியை காட்டி மிரட்டி, இளைஞரிடம் இருசக்கர வாகனம் திருடிய, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் அப்துல் ரசாக். இவர் பணி முடித்து, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனத்தை பறித்துச் சென்றனர். இதற்கிடையே, சரத்குமார், பாலாஜிராஜா, உமாபதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்