சென்னை விமானத்திற்கு வந்த பெரும் ஆபத்தை தடுத்த விமானி | Chennai | airport | Delhi flight

x

சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில், திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை 6.55 மணிக்கு, டெல்லிக்கு புறப்பட இருந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில், 168 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். புறப்படும்முன், விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பதை அறிந்த விமானி, அதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். விமான பொறியாளர்கள் குழுவினர், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விமானம் புறப்படுவது 3 மணி நேரத்திற்கும்மேல் தாமதமாகியுள்ளது. இயந்திரக்கோளாறை உரிய நேரத்தில் விமானி கண்டுபிடித்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்