இளம்பெண்ணை தவறாக சித்தரித்து...குடும்பத்தையும் ஆபாசமாக பதிவிட்ட நபர்

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், அம்மாகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். இவர் நெல் அறுவடை இயந்திர டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
  • இவருக்கும் திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமூக வலைத்தளத்தின் மூலமாக பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
  • நாளடைவில் தொலைபேசி எண்களையும் பகிர்ந்து கொண்டு நட்பாக பழகி வந்துள்ளனர்.
  • திடீரென அந்த பெண் பேசுவதை தவிர்த்ததால் பழிவாங்க எண்ணிய காசிநாதன் அவருடைய புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
  • மேலும் அவருடைய குடும்பத்தை பற்றியும் அவதூறு பரப்பியுள்ளார்.
  • இது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த காசிநாதனை கைது செய்து 15 நாட்கள் காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்