டிவி ரிப்பேர் பார்க்க வந்தவர் மூதாட்டியின் கழுத்தை அறுத்து விட்டு ஓட்டம் | Viruthunagar

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மூதாட்டியின் கழுத்தை அறுத்து 11 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள சசி நகரில் ஜெய்சங்கர், ஜான்சி ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதனிடையே, ஜான்சி ராதா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது, டிவி பழுது பார்ப்பதற்காக வந்த முத்து கணேஷ், திடீரென அவர் கழுத்தை அறுத்து விட்டு 11 சவரன் நகையை பறித்து விட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜான்சி ராதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்து கணேஷை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்