கடன் கொடுத்து நிலம் மோசடி.. வில்லங்க சான்றால் வெளிவந்த உண்மை.. அதிர்ந்து போன புதுக்கோட்டை மக்கள்

x

புதுக்கோட்டை அருகே கடன் கொடுத்த நிலம் மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெட்டுக்காடு, ராப்பூசல் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனமாக பிஏசிஎல், வேளாண் கடன் என்ற பெயரில் பணம் வழங்கியுள்ளது. 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் வழங்கியதோடு, அதற்கான ஆவணங்களில் வயதானவர்களிடம் கையெழுத்து பெற்றுள்ளது. தற்போது 5 ஆயிரம் ஏக்கருக்கு மேலான குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் பிஏசிஎல் நிறுவனம் பெயரில் பத்திரப்பதிவாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது நிலத்தை மீட்டு தரக் கோரி புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்