தாலிக்கயிற்றை வெட்டிய பாஸ்டர்..பெண்ணே தாலியை காட்டியதால் பரபரப்பு - தீயாய் பரவும் காட்சி-ஆந்திராவில் அதிர்ச்சி

x

ஆந்திராவில், பெண்ணின் தாலியை மதபோதகர் ஒருவர் அறுத்து வீசிய வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திராவில், காட்ஸ் வே மிஷன் என்ற பெயரில் செயல்படும் அமைப்பின் சார்பில், கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்து வருபவர் பிரதர் மல்லிகார்ஜுனர் ராவ். இவர், கிறிஸ்தவ மதம் குறித்து பெண்கள் மற்றும் பள்ளிச் சிறார்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், காரில் சென்றபோது அவ்வழியாக சென்ற பெண்ணிடம் மதப்பிரச்சாரம் செய்தார். மேலும், அப்பெண் கையில் அணிந்த கயிறு மற்றும் தாலிக்கயிற்றை கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார். மதபோதகரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்