வீட்டில் நகை காணாமல் போனதால் மகள் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்த பெற்றோர்.. பின்னணியில் Insta

x

கேரளாவில் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய இருவரை போக்சோவின் கீழ் போலீசார் கைது செய்தனர்

கேரளா மாநிலம் கொச்சி அருகே தங்கள் வீட்டில் நகைகள் தொடர்ந்து திருடு போவதாக தம்பதி போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், தம்பதியின் 16 வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது. பள்ளி முடிந்து மரைன் டிரைவ் க்ளாஸ் சென்ற சிறுமிக்கு, வயநாட்டை சேர்ந்த தாஹிர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவர், தனது நண்பரான கண்ணூரை சேர்ந்த ஆசின் என்பவருடன் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது திடுக்கிட செய்தது. இதில், சிறுமியை மிரட்டிய இருவரும், வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வரக்கூறி கொள்ளையடித்தது தெரியவர, போக்சோவின் கீழ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்