வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள்... பொறுமை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

x

திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் இணைந்து வட்டார வளர்ச்சி அலுவலரை சந்திக்க சென்றனர். நீண்ட நேரமாகியும் அலுவலரை காண முடியாததால், ஊராட்சி மன்ற தலைவர்கள் அலுவலக வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அலுவலகத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பணி காரணமாக வர தாமதமானதாகக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்