கிழிந்த ஆடையுடன் புகார் அளிக்க வந்த மூதாட்டி... புதிய உடைகளை வாங்கிக் கொடுத்த Inspector - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

x

குடியாத்தம் அருகே, கிழிந்த ஆடையுடன் புகார் அளிக்க வந்த மூதாட்டிக்கு காவல் ஆய்வாளர் புதிய ஆடை வாங்கி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சீவூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி, குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது அவரது ஆடை கிழிந்திருப்பதை கண்ட காவல் ஆய்வாளர் லட்சுமி, புதிய உடைகளை வாங்கிக் கொடுத்து புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். உடைகளை புன்னகை கலந்த மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட மூதாட்டி, காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்