சாலையை கடக்க முயன்ற மூதாட்டி! -தூக்கி வீசிய அரசு பேருந்து | நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில், சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது அரசு பேருந்து மோதியதில், மூதாட்டி பலத்த காயமடைந்தார். கூடலூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்றுள்ளது. அப்போது, ராஜகோபாலபுரம் என்ற பகுதியில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் மீது பேருந்து மோதியது. இதில், மூதாட்டி பலத்த காயமடைந்த நிலையில், அவர் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்