நகைகளை ஆட்டோவில் தவறவிட்ட மூதாட்டி... பத்திரமாக திரும்ப ஒப்படைத்த ஓட்டுநர்

x

சென்னையில் ஆட்டோவில் 15 சவரன் நகைகளை மூதாட்டி தவற விட்ட நிலையில், சிசிடிவி காட்சி மூலம் நகைகளை மீட்டு போலீசார் மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். திருவல்லிக்கேணி பகுதியைச் சேந்த 63 வயதான சபுராயீ என்ற மூதாட்டி, பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து வீட்டுக்கு வருவதற்காக, அப்பகுதியில் இருந்த ஆட்டோக்களிடம் பேரம் பேசியுள்ளார். அப்போது, நகைகள் இருந்த கட்டப் பையை, ஒரு ஆட்டோவில் மறந்து வைத்து விட்டு, மற்றொரு ஆட்டோவில் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், பையை தவற விட்டது குறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் மூலம் ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்டு போலீசார் நகைகளை மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்