செல்போனுக்கு வந்த ஆபாச லிங்க்...சபலபுத்தியுடன் நம்பரை தொடர்பு கொண்டு.. - ஆசை ஆசையாக சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்

x

செங்கல்பட்டு அருகே ஆபாச லிங்க் அனுப்பி, தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டாபிரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜ்ஜின் செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஆபாச லிங்க் வந்ததாக கூறப்படுகிறது. அதில், சபலம் அடைந்த சுந்தரராஜ் அந்த நம்பரை தொடர்பு கொண்டு கூடுவாஞ்சேரி சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அவரை தாக்கி மோதிரம், லேப்டாப் உள்ளிட்டவைகளை பறித்து சென்றது. இது குறித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுரையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்