என்எல்சி விவகாரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய திமுக கவுன்சிலர்.. கடும் வாக்குவாதம் செய்த கிராம மக்கள்

x

கடலூர் மாவட்டம், கரிவெட்டி கிராமத்தில், என்எல்சி விரிவாக்கத்திற்காக நிலம் ஒப்படைக்க தயார் என்னும் பத்திரத்தில், திமுக கவுன்சிலர் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நெய்வேலி என்எல்சி நிர்வாகம் விரிவாக்கத்திற்காக சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை, கரிவெட்டி வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை கையகப்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, திமுக கவுன்சிலர் செல்வராசு என்பவர், என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்க மக்கள் தயார் என அச்சடிக்கப்பட்ட தாளில் கையெழுத்து பெற்றுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மேலும் திமுக கவுன்சிலர் செல்வராசு என்பவர் என்எல்சி நிறுவனத்தின் இடைத்தரகராகவும் புரோக்கர் போன்றும் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்