மருத்துவத் துறையின் அடுத்த லெவெல்வியக்கவைக்கும் புதிய கண்டுபிடிப்புகள்.!சென்னையில் அசத்திய மாணவர்கள்

x

மருத்துவத்துறையில் மாணவர்களின் 2 ஆயிரத்து 650 புதிய கண்டுபிடிப்புகள் உலக சாதனையை படைத்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவ கல்லூரியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பங்கேற்ற மருத்துவமாணவர்களுக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் எம்பிபிஎஸ் மாணவர்கள் 900 பேர், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 100 பேர் மருத்துவ துறையில் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தினர். குறிப்பாக கண்காட்சியில், பல்வேறு நோய்களை பக்கவிளைவுகள் இல்லாமல் குணப்படுத்துவது எப்படி என்பது குறித்து, காட்சிப்படுத்தி, அதனை விளக்கி காட்டினர். குறிப்பாக பாரம்பரிய மருத்துவ மூலிகைகள் அலோபதி மருத்துவத்தில் பக்க விலைவுகள் இல்லாமல் பயன்படுத்துவது குறித்த மருத்துவ மாணவர்களின் கண்டுபிடிப்பு, அனைவரையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்