"சீன அதிபர் குறித்த புதிய வதந்தி சரிபார்க்கப்பட வேண்டும்" - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

x

சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறித்த புதிய வத‌ந்தி சரிபார்க்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளாரா?

ஜி சமர்கண்டில் இருந்தபோது, ராணுவப் பொறுப்பில் இருந்து அவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நீக்கியதாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவுகிறது, என்றும் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்