கண்டித்த பக்கத்து வீட்டுக்காரர்...வீட்டுக்குள் நுழைந்து குருவியை சுடுவது போல் சுட்டு தள்ளிய இளைஞர்...5 பேர் பலி

x

அமெரிக்காவில் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டப்படி இருந்துள்ளார். அதனை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த வீட்டுக்குள் நுழைந்து கண்ணில்பட்டவர்களையெல்லாம் குருவியை சுவடுதுபோல சுட்டு தள்ளினார். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தப்பிச்சென்ற குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்