கோபத்தில் குழந்தையை விற்ற தாய் - 4 ஆண்டுகள் போராடி கண்டுபிடித்த தந்தை - உருகவைத்த தந்தை பாசம்..!

x

கர்நாடகாவில் கருத்து வேறுபாட்டால் குடும்பம் பிரிந்த நிலையில், மனைவி விற்ற ஆண் குழந்தையை, 4 ஆண்டுகளுக்கு பின் கணவன் போராடி மீட்டார். பெங்களூருவை சேர்ந்த பாலாமணி -மம்தா தம்பதிக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தனர். கணவன் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், ஆண் குழந்தையை மட்டும் மனைவி பணத்திற்கு, ஈரோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்களிடம் விற்றதாக பாலா மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் கர்நாடக மாநில எல்லையில் உள்ள அத்திப்பள்ளி காவல் நிலையத்தில், தனது மகனை கண்டுபிடித்து கொடுக்குமாறு புகார் அளித்தார். புகாரின் பேரில் அத்திப்பள்ளி போலீசார் ஈரோடு சென்று பாலாமணி - மம்தா தம்பதியர்களின் ஆண் குழந்தையை வளர்த்தவர்களிடம் இருந்து மீட்டனர். விற்கப்பட்ட போது ஒன்றரை வயது இருந்த நிலையில், தற்போது அந்த சிறுவனுக்கு 6 வயதாகி உள்ளது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் சிறுவனை வளர்த்தவர்கள், பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்