அக்கா பையனை கொன்ற தாய் மாமன்... ஈரோட்டில்பரபரப்பு

x

ஈரோடு முனிசிபல்காலனி கிருஷ்ணசாமி வீதியை சேர்ந்த லோகநாதன் - மகேஸ்வரி தம்பதிக்கு, கவுதம், கார்த்தி என 2 மகன்கள் உள்ளனர்.

மகேஸ்வரி தனது பரம்பரை சொத்து பத்திரத்தை மகன்களின் மேல் படிப்பிற்காக அடமானம் வைத்து உள்ளனர்.

இதனிடையே, மகேஸ்வரியின் தம்பியான ஆறுமுகசாமி என்பவர், அடமானம் வைத்த சொத்தை மீட்டு, பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆறுமுகசாமிக்கும், மகேஸ்வரியின் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில், ஆறுமுகசாமி, தனது உறவினரான கவினுடன் சென்று, மகேஸ்வரியின் வீட்டில் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த அவர், மறைத்து வைத்திருந்த கத்தியால், கவுதம் மற்றும் கார்த்தியை சரமாரியாக குத்தியதில், இருவரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆறுமுகசாமி, கவின் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்