காதல் என்ற பெயரில் அரங்கேறிய கொடூரம்..! 8ம் வகுப்பு சிறுமியை சிதைத்த திருமணமான கொடூரன்..!

x

சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த வினித் என்பவர் காதலிப்பதாகக் கூறி நாடகமாடியுள்ளார். வினித்திற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைகள் உள்ள நிலையில், பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, வினித் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சி அடைந்த அவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, வினித் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்