இந்தியாவை அதிர செய்த மணிப்பூர் விவகாரம்..கொதித்தெழுந்த பல்வேறு அமைப்புகள் போராட்டம்

x

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

சென்னை உயர்நீதிமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்ற போராட்டத்தில், ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தினர் ஏராளமானோர் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சென்னை பல்லவன் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு சங்கத்தின் மாநில தலைவர் சௌந்திரராஜன் தலைமையில், ஏராளமானோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் பங்கேற்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள உழவர் சந்தை அருகே, தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட நிகழ்வுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்