கரூரை பரபரப்பாக்கிய மாந்தோப்பு.. கணவன்,மனைவிக்கு நடந்த கொடூரம்

x

கரூரில், மாந்தோப்பில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் கொடூரமாக கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம் ஓடையூரை சேர்ந்த சரவணன் என்பருக்கு சொந்தமான மாந்தோப்பை, தங்கவேல்-தைலி தம்பதியினர் கடந்த 15 வருடமாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கணவன் மனைவி இருவரும், தலையில் பலத்த காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், தைலி அணிந்து இருந்த நகைகள் காணமல் போனது தெரியவந்தது. நகைக்காக, கணவன் மனைவி இருவரும் கல்லால் அடித்துக் கொலை செய்யபட்டடிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்